Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஜனவரி 05 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.றொசேரியன் லெம்பேட், ரோமேஷ் மதுசங்க
அனுமதிப்பத்திரம் இன்றி முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்ற வேளை கைது செய்யப்பட்ட 15 இராணுவ வீரர்களையும் தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல மன்னார் நீதவான் நீதிமன்ற நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா, இன்று செவ்வாய்க்கிழமை (05) அனுமதியளித்தார்.
கஜிவத்தை இராணுவ முகாமிலுள்ள இவ் இராணுவ வீரர்கள், நேற்று திங்கட்கிழமை மாலை தமது தேவைக்காக விறகு வெட்டச் சென்ற போது, வெட்டப்பட்ட நிலையில் கிடந்த 14 முதிரை மரக்குற்றிகளை தமது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இராணுவ முகாமிற்குச் சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த மரக்குற்றிகளுடன் சென்ற இராணுவத்தின் வாகனத்தை சிலாபத்துறை பொலிஸார் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இணைந்து சோதனையிட்டனர்.
எனினும், முதிரை மரக்குற்றிகள் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் இவர்களிடம் இருக்கவில்லை.
இந்நிலையில் 15 இராணுவ வீரர்களையும் சிலாபத்துறை பொலிஸார் கைது செய்து இன்று மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
45 minute ago
46 minute ago