2025 ஜூன் 30, திங்கட்கிழமை

'இளைஞர்,யுவதிகளுக்கு விரைவில் அரச வேலை வாய்ப்புக்கள்'

Niroshini   / 2016 ஜனவரி 31 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார்,வவுனியா மாவட்டங்களிலுள்ள படித்த இளைஞர், யுவதிகளுக்கான அரச வேலை வாய்ப்புக்களை, சில கட்சி அமைப்பாளர்கள் மூலம் விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அரச தொழில் முயற்சி அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

சிறிகொத்தாவில் நடைபெற்ற, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த கால ஆட்சியின் போது, நியாயமற்ற அரசியல் காரணங்களுக்காக மேற்படி படித்த இளைஞர், யுவதிகளுக்கு அரச தொழில் வாய்ப்புக்களில் உரிய இடம் வழங்கப்படவில்லை.
கடந்த காலத்தில் அரசியல் பழிவாங்கள் மிக மோசமாக தலை விரித்தாடியது. தற்போது அதற்கு பரிகாரம் வழங்கப்பட்டு வருகின்றது.

அரசியல் பழிவாங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட கட்சி உறுப்பினர்களுக்கு விசேட கருமபீடம், தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனது அமைச்சுக்கு உட்பட்ட இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள், மன்னார் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் மன்னார் நகரில் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பிராந்திய அலுவலகம் திறக்கப்படவுள்ளது.

மேலும், முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் ஓட்டுத்தொழிற்சாலையும் ஆரம்பிக்கப்படும். அத்துடன் வன்னி மாவட்டத்தின் அரசாங்க திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்கள் அனைத்தும் கட்டம் கட்டமாக நிரப்பப்படும்.
இதேவேளை, விரைவில் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் நியமனங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் கிளைகளை மாவட்டங்கள் தோறும் ஸ்தாப்பிப்பதற்கு அந்த மாவட்ட அமைப்பாளர்கள் துரித கதியில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். வன்னி மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி நிருவாக மட்டத்தில் எவ்வித மாற்றங்களும் தற்போது செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X