2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

உதவித்திட்டங்கள் வழங்கிவைப்பு

Niroshini   / 2016 ஜூன் 02 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தனது பாதீட்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் பல்வேறு உதவித்திட்டங்களை நேற்று புதன்கிழமை மன்னாரில் வழங்கி வைத்தார்.

இதற்கமைய, மன்னார் மாவட்டத்தில் சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மன்னார் தொழில் துறை திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வாவுடன் இணைந்து மன்னார் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், தொழில் துறை திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் இணைந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சுய தொழில் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் சைக்கிள்களை வழங்கி வைத்தனர்.

இதேவேளை, மன்னார் பெரியகமம் விளையாட்டுக்கழகத்துக்கு ஒரு தொகுதி விளையாட்டு சீருடையினை வடமாகாண சபை உறுப்பினர் வழங்கி வைத்தார்.

இதன்போது மன்னார் பிரதேச விளையாட்டுத்துறை அதிகாரி ஜேரோமி மற்றும் விளையாட்டுக்கழக வீரர்களும் கலந்துகொண்டனர்.

மேலும், மன்னார் சௌத்பார் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கு ஒரு தொகுதி கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .