2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

உப உணவு செய்கை ஊக்குவிப்புத்திட்டம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

கிளிநொச்சி, பச்சிளைப்பள்ளி (பளை) பிரதேச செயலகத்துக்குட்பட்ட புலோப்பளை கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த 178 விவசாயிகளுக்கு உப உணவு செய்கைக்கான தானியங்கள் ஐ.சி.ஆர்.சி நிறுவனத்தால் வழங்கப்படவுள்ளது.

500 கிலோகிராம் பயறு, 550 கிலோகிராம் உழுந்து, 2280 கிலோகிராம் கச்சான், 500 கிலோகிராம் கௌப்பி என்பன விவசாயிகளுக்கு அவர்களின் விளை நிலங்களுக்கு ஏற்றவகையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படும் காணியை பண்படுத்துவதற்கு 1 ஏக்கருக்கு 500 ரூபாய் வீதம் நிதியும் வழங்கப்படவுள்ளது.
இவை அனைத்தும் 2.1 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X