2025 ஜூன் 30, திங்கட்கிழமை

'உள்ளக விளையாட்டுத்திடல்' திறந்து வைப்பு

Sudharshini   / 2016 ஜனவரி 30 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மாணவர்களிடையே விளையாட்டுத்துறையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் Child Fund நிறுவனமும், வடமாகாண சபையும்  இணைந்து வழங்கிய நிதி உதவியுடன் மன்னார் பேசாலை பத்திமா மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 'உள்ளக விளையாட்டுத்திடல்' நேற்று வெள்ளிக்கிழமை(29) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ஜோ.ஸ்ரனிஸ்லோஸ் தலைமையில் இடம் பெற்ற இவ்விழாவில், முதன்மை விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன், விசேட விருந்தினராக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்ரியன், கௌரவ விருந்தினராக கட்டுமாண திட்ட அலுவலகர் எஸ்.றொபின்சன் ஆகியோர் இணைந்து விளையாட்டுத்திடலை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில்,  உள்ளக விளையாட்டுத்திடலை அமைப்பதற்காக பாடுபட்டவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X