Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 ஏப்ரல் 22 , மு.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலைமன்னார் மேற்கு சிலுவை நகர் பகுதியில் 32 கிலோகிராம் கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் விஷேட அதிரடிப்படையினர், தலைமன்னார் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட தோடுதல்களின் போதே குறித்த கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த கஞ்சாப்பொதி சுமார் 32 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வருகின்றது.
தலைமன்னார் மேற்கு சிலுவை நகர் பகுதியில் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கேரளா கஞ்சா பொதிகள், பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, புதன்கிழமை (20) மாலை தலைமன்னார் மேற்கு பகுதியிலுள்ள சிலுவை நகர் காட்டுப்பகுதிக்கள் சென்று சுற்றி வளைப்பு தோடுதல்களை மேற்கொள்ளப்பட்டன.
இதன் போது பை ஒன்றில் பொதி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த கஞ்சாப் பொதிகளை மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago