2025 ஜூன் 30, திங்கட்கிழமை

45 சதவீத மாணவர்கள் போசாக்கற்றவர்களாக உள்ளனர்

Niroshini   / 2016 மே 12 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா வடக்கு பிரதேச சயெலகப் பிரிவில் உள்ள மாணவர்களில் 45 சதவீதமானவர்கள் போசாக்கற்றவர்களாக உள்ளனர் என வவுனியா வடக்கு சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.

வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயெ இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

போசாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கான செய்ற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டத்தை பிரதேச அரச அரசசார்பற்ற மற்றும் பொது மக்கள் ஈடுபடவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வாறான போசாக்கற்ற மாணவர்கள் அதிகரிப்புக்கு இடப்பெயர்வு மற்றும் பெற்றோர் விழிப்புணர்வின்றி காணப்படுகின்றமை காரணிகளாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மாவட்ட ரீதியில் போசாக்கற்ற மாணவர்கள் 30 தொடக்கம் 35 சதவீதமாக உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X