2025 ஜூன் 30, திங்கட்கிழமை

'சரியாக திட்டமிடப்படாத வேலைத்திட்டம் வெற்றியடையாது'

Sudharshini   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

'சரியான முறையில் திட்டமிடப்படாத எந்தவொரு அபிவிருத்தி வேலைத்திட்டமும் வெற்றியடையாது என்;பது எங்களுடைய வரலாற்று உண்மை' என கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச்; சபை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற, அபிவிருத்தி திட்டம் தாயரித்தல் தொடர்பான பயிற்சி நெறியின் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் கூறுகையில், '2016 ஆம் ஆண்;டில் கிளிநொச்சி மாவட்டத்துக்கு அதிஷ்டமான ஆண்டாக அமைந்துள்ளது. 2016ஆம் ஆண்டில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பல ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதிகள் கிடைக்கவுள்ளன.

வீட்டுத்திட்டங்கள், வாழ்வாதார உதவி, உட்கட்டமைப்புக்கள், சுகாதார வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்திகள்; என பல துறைசார்ந்த அபிவிருத்தி வேலைகளுக்கு நிதிகள் கிடைக்கவுள்ளன' என்றார்.

'யுத்தம் முடிவுற்று 7 வருடங்கள் கடந்துள்ள போதும், மாவட்டத்தினுடைய அபிவிருத்தி முன்னேற்றமடையவில்லை என்பது வெளிப்படையானது. இந்தத் தருணத்;தில் இவ்வாறான உதவிகள் கிடைக்கப் பெறுவது வரவேற்க்கத்தக்கது.

நிதிகளை சரியான முறையில் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதில் தான் அதனுடைய உண்மையான நோக்கம் நிறைவேறும். நிதிகளை செலவளிப்பது என்பது முக்கியமல்ல, மாறாக நிதிகளை எவ்வாறு நாங்கள் செலவளிக்கப்;போகின்றோம்; என்பது தான் முக்கியம்.

எங்களுக்காக எதிர்காலத்தில் கிடைக்கின்ற அல்லது கிடைத்திருக்கின்ற நிதிகளை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் எங்களுடைய திட்டமிடப்பட்ட அபிவிருத்தி இலக்கை அடைய முடியும் என்ற தளத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இந்தப் பயிற்சிநெறி அமையும்'. என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X