2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு ஆரம்பம்

George   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இரண்டாம் நாள் அமர்வு, கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை ஆரம்பமாகியுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் திங்கட்கிழமை (25) ஆரம்பமான முதல் நாள் அமர்வில் 360 பேருக்கு சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டு, 271 பேர் சாட்சியமளித்தனர். 69 பேர் புதிதாக பதிவுகளையும் மேற்கொண்டனர்.

இன்று இரண்டாம் நாள் அமர்வில் சாட்சியமளிக்க கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 362 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

27 ஆம் திகதி புதன்கிழமை கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 250 பேரும்,  28ஆம் திகதி வியாழக்கிழமை பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி (பளை) ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்;த 194 பேரும் சாட்சியமளிக்கவுள்ளனர். 

மொத்தமாக 1,166 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X