2025 ஜூலை 16, புதன்கிழமை

'ஜனாதிபதியின் வழிபாடு பலனளிக்காது'

George   / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“நாங்கள், மாதக்கணக்கில் வீதியில் இருந்து கண்ணீர் வடிக்கும் நிலையில்,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆலயங்களுக்கும் விகாரைகளுக்கும் சென்று ஆசி வேண்டுவது எந்த பலனையும் அளிக்காது” என, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில்,  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப்போராட்டம்,  59ஆவது நாளாக இன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

“காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய பதிலை வெளியிடவேண்டும், மறைமுக தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை வெளிப்படுத்த வேண்டும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

“நாங்கள் ஜனாதிபதியின் தாய்க்கு, சகோதரர்களுக்கு சமனானவர்கள்; இந்த வயதில் எங்களது உறவினர்களைத் தேடி இப்படி மாதக்கணக்கில் போராடி வருகின்றோம். எங்களுக்கு எந்த ஒரு பதிலையும் வழங்காத ஜனாதிபதி, ஆசிவேண்டி நயினாதீவு, நாகபூசணி அம்பாள் ஆலயம், நாகவிகாரை ஆகியவற்றில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.

மாதக்கணக்கில் வீதியில் இருந்து பல துன்பங்களை அனுபவித்து, உறவுகளை நினைத்து கதறும் எங்களைப்போன்ற எத்தனையோ உறவினர்கள் கண்ணீர் வடிக்கின்ற போது, அவருக்கு எப்படி ஆசி கிடைக்கும். எங்களின் கண்ணீரை துடைப்பதன் மூலம் தான் அவருக்கு நல்லாசி கிடைக்கும்” என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X