2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

'நாம் மாற்றுவோம் '

Sudharshini   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் மற்றும் கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'நாம் மாற்றுவோம்' என்ற தொனிப்பொருளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் செயற்றிட்டம், நேற்று வெள்ளிக்கிழமை (4) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் வகையில் 16 நாட்கள் செயல்வாதத்தினை முன்னிட்டு குறித்த செயற்றிட்டம் மன்னாரில் நடைபெற்றது. இதன் போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக துரிதமாகவும் சமத்துவமாகவும் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பொது மற்றும் வேலைத்தளங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை இல்லாமல் செய்வதற்கான சமூக மற்றும் அரச கட்டமைப்பினை மேம்படுத்துதல் போன்ற கருப்பொருளை மையமாக வைத்து  இந்த செயற்றிட்டம் இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் இணைப்பாளர் புகாரி முஹமட்,பெண்கள் அபிவிருத்தி தொடர்பான கருத்துறையாளர் சுரேக்கா, மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் பணியாளர்கள், மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X