2025 ஜூன் 30, திங்கட்கிழமை

'நீர்ப்பாசன மற்றும் கழிவு வாய்க்கால்களை புனரமைத்து தாருங்கள்'

George   / 2016 மே 11 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வவுனியா தெற்குப் பகுதியில் அமைந்துள்ள வேலங்குளத்தின் சேதமடைந்த நீர்ப்பாசனக் கால்வாய்கள் மற்றும் கழிவு வாய்க்கால்கள் என்பவற்றை புனரமைத்து தருமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பின் தங்கிய விவசாயக் கிராமங்களில் ஒன்றாகக் காணப்படும் வேலங்குளத்தின் கீழ், 91 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சுமார் 35 விவசாயிகள் வருடாந்தம் பயிர் செய்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த குளத்தின் 930 மீற்றர் நீளமான அணைக்கட்டு மற்றும் இரண்டு  நீர்ப்பாசனக்கால்வாய்களின் குறிப்பிட்ட அளவு பகுதி என்பன கடந்த 2013ம் ஆண்டு, முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட பிரதேசங்;களுக்கான அவசர கால கருத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டுள்ளபோதும் இதன் கழிவு வாய்க்கால் நீர்ப்பாசனக்கால்வாய்களின் சில பகுதிகளும் சேதமடைந்த நிலையில் புனரமைக்காமல் காணப்படுவதாகவும் இதனை புனரமைத்து தருமாறும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X