2025 ஜூன் 30, திங்கட்கிழமை

'புனர்வாழ்வு அமைச்சின் பங்களிப்புடனேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெறும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

இதுவரைகாலமும் மத்திய அரசாங்கம் நேரடியாக வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. எனினும் எதிர்காலத்தில் மாகாண புனர்வாழ்வு அமைச்சின் பங்களிப்புடனேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெறுமென வடக்கு மாகாண சுகாதார, புனர்வாழ்வு அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா மீள்குடியேற்ற கிராமங்களான கல்மடு, மறவங்குளம் பொது அமைப்புகளுக்கு அந்திம கிரிகைகள் செய்வதற்கான தகர பந்தல்களை இன்று (29) வழங்கி வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த கிராமங்கள் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் இந்தியாவுக்கும் உள்ளக இடம்பெயர்வுக்கும் உள்ளானவர்களை குடியேற்றிய கிராமங்களாகும். பல வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட வீடுகள் தற்போது சேதமடைந்துள்ளதை அறிகின்றேன். இவற்றை மீள திருத்தவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.

இவ்வளவு காலமும் மத்திய அரசானது நேரடியாகவே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக 2013இல் மாகாண சபை உருவாக்கப்பட்ட பின்னரும் மஹிந்த அரசாங்கம் மாகாண சபையை புறக்கணித்தே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதிலும் குறிப்பிட்ட அரசியல்வாதிகள் தமது விருப்பு வெறுப்பிற்கேற்ற வகையில் பயனாளிகளை தெரிவு செய்தனர்.

தற்போது அரசியல் புறசூழல் சிறிதளவில் மாறியதாகவே கருதுகின்றோம். அண்மையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் இனிவரும் காலங்களில் வடக்கு மாகாண சபையின் பங்களிப்புடனேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பணித்துள்ளார். மீள்குடியேற்றம் தொடர்பான மாகாண கொள்ளையொன்றை தற்போது தயாரித்து வருகின்றோம்.

இதற்கான ஆலோசனைகளை பொதுஅமைப்புகளிடமிருந்தும், பொதுமக்களிடமும் பெறுவதற்கு உத்தேசித்துள்ளோம். கடந்தகால கசப்பான அனுபவங்களை புறந்தள்ளி புதிய மீள்குடியேற்ற கொள்கை வகுக்கப்படும். இதன்மூலம், இன,மத பேதமின்றி எதிர்காலத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X