2025 ஜூன் 30, திங்கட்கிழமை

'பயிர்ச் செய்கை மூலம் திடகாத்திரமான சமூகத்தை உருவாக்க வேண்டும்'

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

பயிர்ச்செய்கை மூலம் நோயற்ற திடகாத்திரமான சமூகத்தை உருவாக்குவதற்கான வழியை ஏற்படுத்தவேண்டுமென கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடங்கியுள்ள சிறுபோக நெற்செய்கை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது.

சிறுபோக நெற்செய்கையில் நீர் முக்கியமானது. நீரை எவ்வளவு சிக்கனமாக பயன்படுத்துகின்றோமோ அதில்தான் வெற்றி தங்கியுள்ளது. மாரியில் நல்ல மழை கிடைக்கும். ஆனால் சிறுபோகத்தில் வெயில் கூடுதலாகவிருக்கும். மூன்று, மூன்றரை மாத நெல்லினங்களைப் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக மூன்று மாதத்தில் பிஜி 300 அதே போன்று ஏ.ரி 308, பிஜி 307  இனங்களையும் பயன்படுத்தலாம்.

மூன்றரை மாத நெல்லினத்திலே முக்கியமாக சம்பா இனம் பிஜி 358 கூடுதலாக பயன்படுத்தலாம். கோரா எனப்படுகின்ற ஏ.ரி 362, கீரிச்சம்பா பிஜி 360, பிஜி 370 இவ் நெல்லினம் களி சார்ந்த இடங்களிலே நன்றாக வளரும்.

நாம் ஆரோக்கியமாக வாழாவிட்டால் எதைப்பற்றிக் கதைத்தும் வேலையில்லை. அரிசியை மட்டும் சாப்பிட்டு பயனில்லை. ஏனைய உணவுகளையும் சாப்பிடவேண்டும். பயறு, கௌப்பி, சோயா என்பவற்றைப்; பயன்படுத்த வேண்டும். வயல்களுக்கு யூரியாவைக் குறைவாகப் பயன்படுத்தவேண்டும். இயற்கைப் பசளைகளை கூடுதலாகப் பயன்படுத்தவேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X