Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 மே 10 , பி.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
'இலங்கைப் பொலிஸ் பிரிவில் அனைத்து இனத்தவர்களும் இருப்பது போன்று முப்படைகளிலும் அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்கள் இணைக்கப்படவேண்டும்' என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
தேசிய வீரர்கள் தினத்தின் வடமாகாண நிகழ்வு, முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் அமைந்துள்ள நினைவு தூபியில் நேற்று செவ்வாய்க்கிழமை (10)இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கூறுகையில், '30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தம், பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்டதுடன், வடக்கு மக்களுக்கு பல்வேறுபட்ட இழப்புக்களை கொடுத்திருந்தது.
இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே உயிரிழந்த வீரர்களின் கனவாக இருக்கின்றது. அவர்களின் கனவுக்காக அனைத்து இனங்களும் ஒற்றுமைப்பட வேண்டும்.
இலங்கை பொலிஸ் பிரிவில் அனைத்து இன மக்களும் கடமையாற்றுவது போன்று, முப்படையிலும் அனைத்து இனங்களும் இணைக்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்பார்ப்பாகும். விரைவில் முப்படைகளிலும் அனைத்து இனத்தவர்களும் கடமையாற்றம் வகையில் இணைக்கப்படவுள்ளனர்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago