2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முல்லைத்தீவில் தொடரும் அத்துமீறிய மீன்பிடி: கிராமசேவையாளர் மீது தாக்குதல்

Niroshini   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, கொக்கிளாய்  பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(10) மாலை சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் நோக்குடன் வாடிகளை அமைக்க வந்த பெரும்பான்மை இன மீனவர்களுக்கும்  கொக்கிளாய் கிராமவாசிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்றப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

ஞாயிற்றுக்கிழமை(10) மாலை 5 மணியளவில் இராணுவத்தின் அனுசரணையுடன் தென்னிலங்கையை சேர்ந்த முப்பதுக்கும் மேற்ப்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மீனவர்கள் கொக்கிளாய் பகுதியில் சட்டவிரோதமாக வாடிகளை அமைக்க வருகை தந்திருந்த வேளை, அப்பகுதி மக்களும் கிராம சேவையாளர்களும் அங்கு சென்று அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இதன்போது அங்கு நின்ற பெரும்பான்மை இன மீனவர்களுக்கு ஆதரவான இராணுவம் என சந்தேகிக்கப்படுபவர்களால் கொக்கிளாய்  பகுதியை சேர்ந்த இரு கிராமசேவகர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இதனைத் தொடர்ந்து, தாக்கப்பட்ட கிராம சேவகர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டதையடுத்து, பெரும்பான்மை இன மீனவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

தாக்கப்பட்ட கிராம சேவகர்களில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X