2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மதுபான விற்பனை நிலையத்துக்கு எதிர்ப்பு

Kogilavani   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மணற்குடியிருப்பில் மதுபான விற்பனை நிலையம் கடந்த 23ஆம் திகதி தொடக்கம் இயங்கத் தொடங்கியிருப்பது இப்பகுதி மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கரைதுறைபற்று பிரதேச செயலரினால் மணற்குடியிருப்பில் மதுபான விற்பனை நிலையம் அமைப்பது தொடர்பான மக்களின் கருத்தறியும் கூட்டமொன்று நடத்தப்பட்டது.

இக் கூட்டத்தில் இக்கிராமத்தின் அபிவிருத்திச் சங்கம், மாதர் சங்கம், கடற்றொழில் சங்கம் என்பன மதுபான விற்பனை நிலையத்தை அமைக்கவேண்டாமென எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

பின்னர் மதுபான விற்பனை நிலையத்தினை அமைப்பவர்களுக்கும் கிராமத்தின் பொது அமைப்புகளுக்குமிடையில் ஓர் இணக்கப்பாடு ஏற்பட்டு அதனடிப்படையில் கடந்த 23ஆம் திகதி தொடக்கம் மதுபான விற்பனை நிலையம் இயங்க ஆரம்பித்திருப்பது தொடர்பாக சலசலப்புகள் ஏற்படத்தொடங்கியிருக்கின்றன.

மதுபான விற்பனை நிலையம் அமைந்திருக்கின்ற பகுதியில் ஆழிப்பேரலை நினைவுச் சின்னம், சிறுவர் பூங்கா, தனியார் கல்விநிலையம், தேவாலயம் என பொதுவிடங்களை உள்ளடக்கி 110 குடும்பங்கள் வாழ்கின்ற பகுதியில் மதுவிற்பனை நிலையம் இயங்கத்தொடங்கியிருப்பது எதிர்காலத்தில் பெரும் பிரச்சனைகள் உருவாக்குமென பொதுமக்களினால் கருத்துத் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி விடயம் தொடர்பாக கரைதுறைபற்று பிரதேச செயலர் ரி.திரேஸ்குமார் கருத்துத் தெரிவிக்கையில்,

மதுபான விற்பனை நிலையத்தை அமைப்பது தொடர்பாக கிராமமக்களிடம் கருத்துக் கேட்டிருந்தோம். மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். பின்பு மணற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் சங்கம், கடற்றொழில் சங்கம் என்பன மதுபான விற்பனை நிலையம் அமைப்பதற்கான இணக்கப்பாட்டை கடிதமூலம் எனக்குத் தெரிவித்திருந்தனர் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X