2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் விழிப்புணர்வு பேரணி

Niroshini   / 2016 மார்ச் 08 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கக்கோரி மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மன்னாரில் விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் குருஸாந்தன் மஹாலட்சுமி தலைமையில் நடைபெற்ற பேரணியில், நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு, தமது வாயை கறுப்பு துணியினால் கட்டி அமைதியான முறையில் ஈடுபட்டனர்.

மன்னார் பிரஜைகள் குழு காரியாலயத்துக்கு முன் ஆரம்பமான குறித்த பேரணி, பிரதான வீதியூடாக சென்று மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தை சென்றடைந்தது.

இதன்போது, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் தமது கோரிக்கை அடங்கிய துண்டுப்பிரசுரங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மன்னார் பஸார் வீதியூடாக பேரணியாக சென்று, மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஒன்று கூடினர்.

இதன்போது, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் பெண்களுக்கு எதிரான வண்முறைகளை ஒழிக்கக்கோரி பொதுவாக துண்டுப்பிரசுரங்கள் கையளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X