2025 ஜூன் 30, திங்கட்கிழமை

'வீடுகளை கட்டி கொடுக்க முன் வந்ததது என்றால் அது இந்தியாதான்'

Niroshini   / 2016 ஜனவரி 11 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

உலகிலேயே அந்திய நாடொன்றுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்கும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கமுடியும் என யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜா தெரிவித்தார்.

வவுனியா பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட விளக்குவைத்தகுளம் கிராமத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தினூடாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று(11) இடம்பெற்றபோது அதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்பொதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நீங்கள் எல்லோரும் என் உறவுகள் என்று கூறுவதையே நான் விரும்புகிறேன். போருக்கு பின் வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்து வருகின்றன.

குறிப்பாக இந்தியா வடக்கு மாகாணத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் பல மக்கள் வீடில்லாமல் இருக்கும் நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா வீடுகளை நிர்மாணிக்க உதவி வழங்கியுள்ளது என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X