2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

23 வருடங்களின் பின்னர் நெல் கொள்வனவு

Niroshini   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் விசேட அதிரடிப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நெல் களஞ்சியசாலையில் 23 வருடங்களின் பின்னர் நெல் இன்று முதல் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றது.

விசேட அதிரடிப்படையின் பிரதான முகமாக காணப்பட்ட இந் நெல் களஞ்சியசாலை கடந்த வாரம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் உத்தியோகபூர்வமாக மீள் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வவுனியாவில் விவசாயிகளிடமிருந்து நெல்லை அரசாங்கம் கொள்வனவு செய்யும் பட்சத்தில் களஞ்சியப்படுத்துவதற்கு ஏதுவான இடவசதிகள் அற்ற நிலையில் கடந்த சில மாதங்களாக நெல் கொள்வனவை நிறுத்தி வைத்திருந்த நிலையில், இக்களஞ்சியசாலை அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக இன்று முதல் மேற்படி களஞ்சியசாலையில் 3,000 மெற்றிக்தொன் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நெல் கொள்வனவு செய்யப்படுவதையும் களஞ்சியசாலையின் இடவசதியையும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார ஆகியோர் நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X