Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வவுனியா மாவட்டத்தை வட மாகாண விவசாய அமைச்சர் புறக்கணித்து வருகின்றார் என வட மாகாணசபை உறுப்பினர் எம். தியாகராசா தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்.
வவுனியாவில் உள்ள பல குளங்களை திருத்தம் செய்து விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என நான் பல தடவைகள் விவசாய அமைச்சருக்கு கூறியிருந்தேன.; ஆனால், அவர் இரண்டரை வருடங்கள் கடந்தும் ஒரு குளத்தையேனும் திருத்தம் செய்து ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யக்கூடிய வசதியை செய்து கொடுக்கவில்லை.
அது மாத்திரமின்றி, வவுனியா நகர்ப்பகுதியில் அமைந்திருந்த மாகாணசபையின் விவசாய திணைக்களத்துக்கு சொந்தமான பல கோடி ரூபாய் பெறுமதியான ஒரு ஏக்கர் காணியை எவரது அனுமதியும் இன்றி மத்திய அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளார். இதற்கு யாரிடம் கேட்டார் யாருடைய ஒத்தழைப்புடன் செய்தார் என்பது தெரியாது.
இதனைவிட புளியங்குளம் திவிநெகும காணி பல கோடி ரூபாய் பொறுமதியானது என நான் அறிந்து இது மாகாண சபைக்குரிய சொத்து வவுனியா மக்களின் சொத்து எனவே இந்த காணியை மாகாணசபைக்கு கோருமாறும் அமைச்சருக்கு தனிப்பட்ட ரீதியிலும் தெரிவித்திருந்தேன். ஆனால் அவர் எது வித அக்கறையும் காட்டவில்லை.
மாகாணசபையில் பிரேரணை கொண்டு வந்து மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பியிருந்தோம். ஆனால், அந்த பிரேரணை கூட செல்லாக்காசாகிவிட்டது. அதன் காரணமாக மத்திய அரசாங்கம் அந்த காணியை எடுத்துள்ளது. இதன் காரணமாக அதன் மூலம் வாழ்வாதாரத்தை நம்பியிருந்த சுமார் 150 பேர் தொழில் இன்றியுள்ளனர்.
இவ்வாறான வகையில் எமது வவுனியா மாவட்டத்தை வட மாகாண விவசாய அமைச்சர் புறக்கணித்து வருகின்றார்.
அது மாத்திரமின்றி யாழ்ப்பாணத்திலே பாத்தீனியத்தை அழிப்பது தொடர்பான திட்டத்தை எடுத்திருந்தார். இந் நிலையில் மாகாணசபை அமர்விலும் அவரிடம் நேராகவும் சென்று யாழ்ப்பணத்தில் மாத்திரம் பாத்தீனியம் இல்லை ஏனைய முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டத்திலும் உள்ளது.
எனவே ஏனைய மாட்டத்திலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரினேன். ஆனால் எதுவித அக்கறையும் செலுத்தவில்லை.
ஆகவே எத்தனை நாட்களுக்கு மௌனம் சாதிப்பது என்ற நிலையிலேயே சகல அமைச்சக்கள் மீதும் உள்ள குறைகளை சுட்டிக்காட்டவுள்ளோம். அதன் முதற்கட்டமாக விவிசாய அமைச்சின் பிழைகளை சுட்டிக்காட்டினோம்.
இந் நிலையில் வட மாகாண மக்கள் முதலமைச்சரை ஒரு நீதியரசர் கனவான் என் நம்பியிருந்தனர். ஆனால் தற்போதுதான் தெரிகின்றது முதலமைச்சர் தன்னிச்சையாக செயற்படுகின்றமையை எண்ணி மனம் வருந்துகின்றோம்.
அத்துடன் நாம் நான்கு அமைச்சுக்கள் மீதும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவற்றை கடிதம் மூலமாக அனுப்பியுள்ளோம். நடவடிக்கை எடுக்காத நிலை ஏற்படுமாயின் அவற்றை பகிரங்கப்படுத்தவும் நாம் தயாராகவுள்ளோம் என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago