2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

113,468 பேருக்கு குடிநீர் விநியோகம்

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில், 113,468 பேருக்கு குடிநீர் பவுசர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருவதாக, கிளிநொச்சி மாவட்டச் செயலகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 34,318 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே, தற்போது பவுசர்கள் மூலம் குடிநீரைப் பெற்று வருகின்றனர். 

மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சியான சூழலால் இக்குடிநீர்த் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது பரவலாக மழை வீழ்ச்சி இடம்பெற்றாலும் குடிநீருக்கானத் தீர்வுகள் உடனடியாக கிடைக்காது என்பதன் காரணமாக, குடிநீர் விநியோகம் பிரதேச செயலகம், பிரதேச சபைகள் மூலம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .