2025 ஜூலை 30, புதன்கிழமை

வவுனியாவில் இராணுவ குடும்பத்தினருக்கு நலனுதவித்திட்டங்கள்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


இராணுவத்தில் உயிரிழந்த மற்றும் அங்கவீனமான படை வீரர்களின் உறவினர்களுக்கு நலனுதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியாவை சேர்ந்த 99 குடும்பத்தினருக்கு இவ் உதவிகள் வழங்கப்பட்டன.

வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வட மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி கலந்துகொண்டு உதவிகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர, 56 ஆவது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ரணவக்க உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .