2025 ஜூலை 30, புதன்கிழமை

முல்லைத்தீவில் யுவதியின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 05 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

முல்லைத்தீவு, முள்ளியவளைப் பொலிஸ் பிரிவிலுள்ள நீராவிப்பிட்டியில் 21 வயதான யுவதி ஒருவரின் சடலம் வீட்டிலிருந்து இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லோகேந்திரன் நிஸானி என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .