2025 ஜூலை 23, புதன்கிழமை

பார்வையற்றோர் சங்கத்திற்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி பார்வையற்றோர் சங்க அங்கத்தவர்களுக்கு சுவிஸ் புலம்பெயர்ந்தோர் அமைப்பான 'எழுகை' என்றும் அமைப்பினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த உலர் உணவு வழங்கும் நிகழ்வு வன்னி பார்வையற்றோர் சங்கத்தின் தலைவர் அ.ரூபராசா தலைமையில் சனிக்கிழமை (21) கிளிநொச்சி பரந்தனில் அமைந்துள்ள வன்னி பார்வையற்றோர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

பொருட்களை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பார்வையற்ற சங்க அங்கத்தவர்களுக்கு வழங்கி வைத்தார்.

வன்னிப் பகுதியில் பார்வையிழந்தவர்களுக்கு எழுகை அமைப்பினால் சுழற்சி முறையில் மாதாந்தம் இந்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .