2025 ஜூலை 23, புதன்கிழமை

மன்னாரில் மூவாயிரம் ஏக்கரில் சோளம் பயிர்செய்ய ஏற்பாடு: றிஸாட்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்ட விவசாயிகள் மத்தியில் சோளம் செய்கையினை ஊக்குவிக்கும் வகையில் மன்னார் மாவட்டத்தில் மூவாயிரம் ஏக்கரில் சோளம் பயிர்ச்  செய்கையினை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் அவசர கூட்டமொன்று அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. அதன்போது உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்களும் விவசாயிகளும் கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் கடுமையாக பாதீப்படைந்துள்ளனர். மாவட்டத்தில் 26 ஆயிரம் விவசாயிகளும் 9 ஆயிரம் மீனவர்களும் பாதீப்படைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிப்படைந்த மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் நஸ்டஈட்டைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்;ளப்பட்டுள்ளது. இதேவேளை மன்னார் மாவட்ட விவசாயிகளின் மத்தியில் சோளம் பயிர்ச் செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர் சோளம் செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் வாரம் மன்னாரில் விசேட கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .