2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மன்னார் மனித புதை குழி தோண்டும் பணி மீண்டும் ஆரம்பம்

Super User   / 2014 பெப்ரவரி 09 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டும் பணி மீண்டும் இன்று திங்கட்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் ஆரம்பிக்கப்படவுள்ளது என மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி குறித்த பகுதியில் நீர் இணைப்பிற்கு  குழாய் பொருத்துவதற்காக நிலம் தோண்டப்பட்டபோது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனைத்தொடுந்து கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் 19 தடவைகள் குறித்த திருக்கேதிஸ்வரம் மனித புதை குழி தோண்டப்பட்டுள்ளது.

இதுவரை 55 மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் எச்சங்களாகவும் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 28 மனித எலும்புக்கூடுகள் பொதி செய்யப்பட்டு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த ஜனவாஜ 31ஆம் திகதி முதல் குறித்த மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்டு வந்த அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் இன்று திங்கட்கிழமை 20ஆவது தடவையாக மீண்டும் குறித்த மனித புதை குழி தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .