2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இந்தியப் பிரஜைக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 10 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தின்  பம்பைமடு கிராமத்தில் புடைவை வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜை ஒருவரை  எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ரிஸ்வான் ஞாயிற்றுக்கிழமை (09) உத்தரவிட்டார்.

சுற்றுலா விஸாவில் வந்த இந்தியரான எஸ்.குணசேகர் என்பவரை  சனிக்கிழமை (08)  கைதுசெய்ததாக பம்பைமடு பொலிஸார் தெரிவித்தனர். 

இவர் கடந்த 10 நாட்களாக வவுனியாவில் தங்கியிருந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையிலிருந்து தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .