2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஜூலை 23 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து, சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 20பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

4 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். பின் குறித்த மீனவர்களை கடற்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணை செய்ததன் பின்னர், அவர்களைஇன்று புதன்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையிலேயே, அவர்களை எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X