2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கன்டர் ரக வாகன விபத்து: இருவர் படுகாயம்

Gavitha   / 2014 ஜூலை 23 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா புதூர் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (23) கன்டர் ரக வாகனம் ஒன்று குடைசாய்ந்ததில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அரிசி மற்றும் தவிடு என்பவற்றை ஏற்றிச்சொன்ற வாகனமே, இவ்வாறு வேக கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளது.

இவ்விபத்தின்போது இராணுவத்தினரால் கட்டப்பட்டிருந்த சிறிய அலங்கார வடிவமும் சிதைவடைந்து உள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக புளியங்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X