2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கற்றலுக்கான கூடங்கள் திறந்து வைப்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 27 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிளிநொச்சி மத்திய கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிர்வாக அலகு, உயர்தர விஞ்ஞான கூடங்கள், கணனி ஆய்வுகூடம், நூலகம், பல்லூடக அறை, வகுப்பறைகள் உள்ளடங்கிய கட்டிடத் தொகுதி வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டு பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மஹிந்தோதய இடைநிலைப் பாடசாலை புதிய கட்டிடத்தின் இத்திறப்பு விழா இன்றைய தினம் (27) கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோரின் பங்கேற்றலுடன் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன பிரதான வாயிலை திறந்து வைத்ததுடன் புதிய கட்டிடத்திற்கான நினைவுக்கல்லையும் திரைநீக்கம் செய்து வைத்தார்.

இதனிடையே தேசிய மட்டத்தில் சாதித்த மாணவ, மாணவிகளும் பயிற்றுவித்த ஆசிரியரும் இந்நிகழ்வில் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சத்தியசீலன், கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் சித்ரானந்த, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உட்பட கல்விப்புலம் சார்ந்தோர் கலந்து கொண்டனர். 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X