2025 ஜூலை 17, வியாழக்கிழமை

'ஓமந்தை சோதனைச்சாவடிக்கு சென்ற மகளை காணவில்லை'

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து தனது மகள் காணாமல் போயுள்ளதாக இலுப்பைக்கடவையினைச் சேர்ந்த பூலபாலசிங்கம் ரஞ்சிதமலர் என்ற தாய் நேற்று (9) சனிக்கிழமை, மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.

அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவிக்கையில்,

'எனது மகளான பூலபாலசிங்கம் நிரஞ்சினிக்கு அப்போது 18 வயதாகும். உயர்தரம் படித்துக்கொண்டிருந்த போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த போது கடந்த 19-03௨009 அன்று ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் காணாமல் போனார்.

தற்போது  எனது மகள் எங்கே இருக்கின்றாள் என்ற விடயம் எனக்குத் தெரியாது. இராணுவ கட்டுடப்பாட்டு பகுதியான ஓமந்தை சோதனைச்சாவடிக்கு வந்த பிள்ளை எப்படி காணாமல் போனால் என்று தெரியவில்லை' என அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X