2025 ஜூலை 16, புதன்கிழமை

அனைத்துலக காணாமல் போனோர் தினத்தை வவுனியாவில் அனுஷ்டிக்க ஏற்பாடு

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

அனைத்துலக காணாமல் போனோர் தினம், நாளை சனிக்கிழமை (30 ஆம் திகதி) வவுனியா நகர சபை மண்டபத்தில் காலை 9.30 மணி தொடக்கம் மாலை 2.30 மணிவரை அனுஷ்டிக்கப்படவுள்ளது.

பிரஜைகள் குழு மற்றும் காணாமற்போன உறவுகளைத்தேடும் குடும்பங்களின் இணையம் ஆகியவை இணைந்தே இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

இது தொடர்பில், வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அனைத்துலக காணாமல் போனோர் தினம், நாளை 30 ஆம் திகதி சனிக்கிழமை சர்வதேசரீதியாக நினைவு கூறப்படுகிற நிலையில் வவுனியாவிலும் அனுஷ்டிக்கப்படவிருக்கின்றது.

காணாமல் ஆக்கப்படுதலுக்கெதிரான சர்வதேச தின நிகழ்வில் அனைத்து உறவுகளும் கலந்து கொண்டு தமது உணர்வை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த அணி திரண்டுவரவேண்டும்.

வடக்கில் பல ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் இத் தினத்தில் அவர்களின் நிலை குறித்து சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் நாம் அமைதியான முறையில் எமது உணர்வுகளை வெளிக்கொண்டு வர வேண்டும்.

-இந்த நாட்டில்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றது. இந்த நிலையில் காணாமல் போன உறவுகளை கண்டுபிடிக்கக்கோரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்விற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒட்டு மொத்த ஆதரவை வழங்கி வரும் நிலையில் காணாமல் போன உறவுகளின் சொந்தங்கள் இந்த அமைதியான முறையில் இடம் பெறும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு எமது உறவுகளின் நிலை என்ன என்று கண்டறிய சர்வதேசத்திடம் வழியுத்தவுள்ளோம்.

இந்த நிகழ்வின் இறுதியில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது. எனவே, அனைத்து மக்களையும் இந்த அமைதியான நிகழ்வில் கலந்து கொண்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடிக்க குரல் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X