2025 ஜூலை 16, புதன்கிழமை

மன்னார் விபத்தில் ஒருவர் பலி

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் பொது பஸ் தரிப்பிடத்தில் இன்று(29) வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிழந்தவர், உப்புக்குளத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீட் முஹம்மது அன்சாருல்லா (வயது 58) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மன்னார் தரிப்பிடத்தினுள் வேகமாக நுழைந்த போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று, மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

காயமடைந்தவர், மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பஸ் சாரதியை பொலிஸார் கைது செய்ததோடு பஸ்ஸையும் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X