2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் விருதுப்போட்டி

Gavitha   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடாத்தப்படும் 2014 ஸ்ரீ லங்கா யூத் தேசிய விருதுப் போட்டியின் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்திலான போட்டி, எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளியவளை வித்தியானந்தா தேசிய பாடசாலையில் இடம்பெறவுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மா.சசிகுமார் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே மாற்றுத் திறனுடைய (னுகைகநசநவெடல யுடிடநன) இளைஞர் யுவதிகளுக்கான போட்டிகள் நடாத்தப்பட்டுள்ள நிலையிலேயே தமிழ், ஆங்கில மொழிகள் மூலமான பின்வரும் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

தமிழ் மொழியில் அறிவிப்பாளர், பேச்சு, இளம் பாடகர், கிராமியப் பாடல், கிராமிய நடனம், புத்தாக்க நடனம், பரத நாட்டியம், கதக், அபிநய நாடகம், சாஸ்திரிய இசை, மேலைத்தேய இசை போன்ற போட்டிகளும் ஆங்கில மொழியில் அறிவிப்பாளர், பேச்சு, இளம் பாடகர் போட்டிகளும் இடம்பெறவுள்ளது.

இதே வேளை சிங்கள் மொழி மூலமான போட்டிகள் விரைவில் வெலிஓயாவில் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், பின்வரும் போட்டிகளுக்கான ஆக்கங்களை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், மாவட்டப் பணிமனை, ஏ 9 வீதி, மாங்குளம், முல்லைத்தீவு என்ற முகவரிக்கு தபால் மூலமும் பிரதேச செயலகங்களில் இளைஞர் சேவை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவும் முடியும் என தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சாகித்திய போட்டிகளான நாவல், சிறுகதை, கட்டுரை, பாடலியற்றல், வானொலி நாடகம், தொலைக்காட்சி நாடகம், சிறுவர் இலக்கியம் (கவிதை, கதை) போன்ற போட்டிகளுக்கும் தமிழ், சிங்கள பொதுப் போட்டிகளான சித்திரம், புகைப்படம், சிற்பங்கள் போன்ற போட்டிகளுக்கும் உரிய ஆக்கங்களை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சகல போட்டிகளிலும் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகள் பங்குகொள்ளலாம் எனவும் நாடகப் பிரிவுப் போட்டிகளுக்கு 15 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு 0212060017ஃ0772350374 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .