2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, ஏ - 9 வீதியில் பரந்தனின் 259ஆவது  மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில்  படுகாயமடைந்த இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.

தர்மபுரம் கட்டுக்காடு கல்மடுப்பாலம் எனும் இடத்தைச் சேர்ந்த சண்முகம் முகுந்தன் (வயது 22) என்பவரே உயிரிழந்தார்.

மேற்படி பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்து சம்பவித்தது.

நேற்று சனிக்கிழமை  (18) இரவு  வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இருவரே விபத்துக்கு உள்ளாகினர்.

இந்த விபத்து தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .