2025 ஜூலை 23, புதன்கிழமை

குழுமோதலுடன் தொடர்புடைய 13பேருக்கு அழைப்பு

Thipaan   / 2015 ஜனவரி 25 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு நீராவிப்பிட்டி பிரதேசத்;தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற குழு மோதலில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 13பேரை நாளை திங்கட்கிழமை பொலிஸ் நிலையத்துக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸார், இன்று ஞாயிற்றுக்கிழமை(25) தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நீராவிப்பிட்டியில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் நான்கு பேர் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இதுவரையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் முள்ளியவளை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய 13 பேரை நாளை பொலிஸ் நிலையம் சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .