2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பாலை மரங்களை வெட்டியவர்களுக்கு அபராதம்

George   / 2015 மே 26 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி முட்கொம்பன் காட்டுப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பாலை மரங்களை வெட்டிய 4 பேருக்கு தலா 20,000 ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், செவ்வாய்க்கிழமை (26) தீர்ப்பளித்தார்.

குறித்த நால்வரும், திங்கட்கிழமை (25) மரங்களை வெட்டிக்கொண்டு இருக்கும் போது, அங்கு சென்ற பொலிஸார் அவர்களை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து சுமார் 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாலை மரங்களை கைப்பற்றினர்.

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது, அவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டதையடுத்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .