2025 ஜூலை 05, சனிக்கிழமை

சிறுமி மீது வன்புணர்வு; சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை

Menaka Mookandi   / 2015 மே 29 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பரந்தன் சிவபுரம் பகுதியில் கடந்த 25ஆம் திகதி 7 வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 15 வயது சிறுவனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி தொடர்ந்து அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு வியாழக்கிழமை (28) உத்தரவிட்ட கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன், இந்த வழக்கை எதிர்வரும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

பாடசாலை சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை பொதுநோக்கு மண்டபத்துக்கு அருகிலுள்ள மலசலகூடத்துக்குள் அழைத்துச்சென்று பாலியல் வன்புணர்வு செய்தான் என்ற குற்றச்சாட்டில் மேற்படி சிறுவன் கைது செய்யப்பட்டான்.

பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவம் தொடர்பில் தனது தாயாருக்கு தெரிவித்த பின்னர் மயங்கி வீழ்ந்துள்ளார். உடனடியாக சிறுமியை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸார், சிறுவனை கைது செய்து, கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் வியாழக்கிழமை (28) மாலை ஆஜர்ப்படுத்தினர். குறித்த சிறுவனை மருத்துவ பதிசோதனைக்கு உட்படுத்தி மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் அடையாள அணிவகுப்பு ஒன்றை மேற்கொள்வதற்கும் பொலிஸார் அனுமதி கோரியிருந்தனர். அதற்கு நீதவான் அனுமதி வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .