2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கையெழுத்துவேட்டை

Menaka Mookandi   / 2015 ஜூன் 07 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சர்ச்சையினை அடுத்து தடைப்பட்டுள்ள வட மாகாண அகதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி இரண்டு இலட்சம் கையொழுத்துக்களைச் சேகரிக்கும் நடவடிக்கையொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு, மன்னார், முசலி பிரதேச சபைக்குட்பட்ட மறிச்சுக்கட்டி கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வாணிப அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்,  வட மாகாணசபை உறுப்பினர் ரிபாகான் பதியுதீன், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

வடபகுதி முஸ்லிம் அகதிகளின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி ஆதரவுக் கையொழுத்து பெறும் மற்றுமொரு பாரிய நடவடிக்கையொன்று, எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்-ஆ தொழுகையினைத் தொடர்ந்து நாடு முழுவதிலுமுள்ள பள்ளிவாசல்களில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X