2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

'தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலய குறைப்பாடுகள் தீர்க்கப்படுமா? '

Gavitha   / 2015 ஜூன் 07 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் காணப்படும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாடசாலை அதிபர் ஏ.சி.ரியாஸ் சனிக்கிழமை (06) தெரிவித்துள்ளார்.

01ஆம் ஆண்டு முதல் உயர்தரம் வரை (கலைப்பிரிவு) வரை 1 சி தரப்பாடசாலையாக இயங்கிவரும் இப்பாடசாலையில், அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான விடுதி வசதிகள், வகுப்பறைக்கட்டடம், விஞ்ஞான ஆய்வுக்கூடம், கணினி ஆய்வுக்கூடம், விளையாட்டு மைதானம், எஞ்சிய மதில் வேலை, போட்டோ கொப்பி இயந்திரம், நூலகத்துக்கான  தளபாடங்கள் மற்றும் நூல்கள் என்பன பற்றாக்குறையாக இருந்து வருகின்றது.

இது பற்றி எமது மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தபோதிலும் எதுவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பவில்லை. அத்துடன், எமது வலயக்கல்வி அலுவலகம் செய்ய வேண்டிய உதவிகளை செய்து கொடுக்கிறது. ஆனால், செய்து கொடுப்பதாக வாக்குறுதியளித்துச் சென்ற அரசியல்வாதிகள் இன்றுவரைக்கும் அதுபற்றி எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

வடமாகாண சபை உறுப்பினர் யாசின் ஜவாஹிரின் முயற்சியால் இப்பாடசாலைக்கு ஒரு பகுதி சுற்றுமதில் மற்றும் விளையாட்டு அரங்கு என்பன பெற்றுக்கொடுக்கப்பட்டது. இன்னும் இப்பாடசாலைக்கு அதிகமான தேவைகள் காணப்படுகின்றன.

சுமார் 500க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கும் இந்த பாடசாலையில், கரப்பந்தாட்டம், கிரிக்கெட், எல்லே, சமூக விஞ்ஞான போட்டி, கலாசார போட்டி என பலதுறைகளிலும் மாணவர்கள் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வலயம், மாவட்டம், மாகாணம், அகில இலங்கை ரீதியில் சென்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

எனவே, கற்பதில் மாத்திரமின்றி விளையாட்டு மற்றும் கலாசார போட்டிகளில் அதிக ஆர்வத்தைக் கொண்டுள்ள எமது மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேலும் விருத்தி செய்வதற்கு இந்தப்பாடசாலையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு உரியவர்கள், வாக்குறுதியளித்தவர்கள் முயற்சிக்க வேண்டும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X