2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வீதிகளுக்கு இறங்கும் விச ஜந்துக்கள்: மக்கள் அச்சம்

Sudharshini   / 2015 ஜூன் 10 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள வீதிகளின் இரு மருங்குகளிலும் உள்ள  பற்றை காடுகளிலிருந்து பாம்பு உள்ளிட்ட விசஜந்துக்கள் வீதிகளுக்கு படையெடுப்பதனால் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் மக்களின் செறிவு குறைவாக காணப்படுவதால் பல காணிகள் பற்றை காடுகளாக மாறியுள்ளன. அவற்றுகுள் விச பாம்புகள் உள்ளிட்ட ஜந்துக்கள் மட்டுமன்றி அதற்குள் இருக்கின்ற நீர் நிலைகளில் முதலைகளும் இருக்கின்றன.

அவைகள் வீதிகளுக்கு படையெடுப்பதனால் அச்சத்துடன் பயணிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அந்த பற்றைக்காடுகளை துப்புரவு செய்துதருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X