2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு வழங்கப்படவில்லையென புகார்

Menaka Mookandi   / 2015 ஜூன் 11 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

சிறுநீரக நோயாளிகளுக்கு மாதாந்தம் 3000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தின் கீழ்  வவுனியா மாவட்ட சிறுநீரக நோயாளிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி சிறுநீரக நோயாளிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அநுராதபுரம் மாவட்டத்துக்;கு பின்னர் வவுனியா மாவட்டமே அதிக சிறுநீரக நோயாளிகளை கொண்ட மாவட்டமாக இனங்காணப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய அரசின் வரவு செலவு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டதுபோன்று அனைவருக்கும் கிடைக்க கூடியவாறு கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் அதிகளவான சிறுநீரக நோயாளிகள் விண்ணப்பித்துள்ள போதிலும் சிறு தொகையானவர்களுக்கே நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையினால் தமக்கு குறித்த பணம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்டோர் உடன் நடவடிக்கை எடுக்கமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X