2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் செலுத்தியவருக்கு கட்டாயச்சிறை

Menaka Mookandi   / 2015 ஜூன் 11 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பூநகரி பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்றவருக்கு ஒரு மாதகால கட்டாயச் சிறைத்தண்டனையும், 7,500 ரூபாய் அபராதமும் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் புதன்கிழமை (10) தீர்ப்பளித்தார்.

அவருடைய சாரதி அனுமதிப்பத்திரத்தை ஒரு மாதகாலத்துக்கு இடைநிறுத்தி வைக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.

பூநகரிப் பகுதியில் சென்ற இவரை செவ்வாய்க்கிழமை (09) கைது செய்த பூநகரி பொலிஸார், கிளிநொச்சி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்ப்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X