2025 மே 07, புதன்கிழமை

250 பேருக்கு எதிராக நடவடிக்கை

Niroshini   / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-க. அகரன்

வவுனியாவில், கடந்த மாதம் முதல் இன்று (27) வரையான காலப்பகுதி வரையில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறிய 250 பேருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளிகள் உட்பட சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்ட சுமார் 250 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பொலிஸாரால் தொடர்ந்தும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், தேவையின்றி நகரில் நடமாடுவதை தவிர்க்குமாறும், சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி  நடக்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார்  கேட்டுக்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X