Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
34 நாள்களுக்குள் சரியான தீர்வு திட்டம் கிடைக்காதுவிடத்து, மாகாண சபை உறுப்பினர்களை குறைக்கூறி பலனில்லையென, வடக்கு மாகாணசபை உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி தெரிவித்தார்.
அச்சுவேலி மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க ஆடை உற்பத்தி தொழிற்சாலை நிலையத்தை, நேற்று (22) திறந்துவைத்து உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், மக்களாகிய நீங்கள் எவ்வளவு எதிர்பார்ப்புடன் தங்களுக்கு வாக்களித்திருந்தீர்களெனவும் இன்று தாங்கள் மாகாண சபையில் இருக்கிறோமா, இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மாகாண சபையின் ஆயுட்காலம் முடிய கிட்டத்தட்ட 34 நாள்களே உள்ள நிலையில், தாங்கள் நீதிமன்றில் நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தங்களுக்கு அமைச்சர்கள் இல்லையெனவும் சரியான அமைச்சு அவை கூட இல்லையெனவும் குற்றஞ்சாட்டிய அவர், பல விடயங்களை முதலமைச்சரின் அனுமதியுடன் திணைக்களத் தலைவர்களே முன்னெடுப்பதாகவும் விசனம் தெரிவித்தார்.
எனவே, இந்த 34 நாள்களுக்குள் வடமாகாண சபையில் அமைச்சரவை இல்லாது போகுமானால், நீதிமன்ற உத்தரவாலும் கூட அமைச்சரவையை ஸ்தாபிக்கும் நிலைமை இல்லாதுபோகுமென, அவர் மேலும் கூறினார்.
25 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago