2025 ஜூலை 02, புதன்கிழமை

அக்கராயன் மகா வித்தியாலய கட்டடங்கள் புனரமைப்பு

George   / 2016 ஜூன் 09 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார் 

கிளிநொச்சி, அக்கராயன் மகா வித்தியாலயத்தில் சேதமடைந்த கட்டடங்கள், மத்திய கல்வி அமைச்சின் 2 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் புனரமைக்கப்பட்டு வருகின்றன. 

1972இல் உருவாக்கப்பட்ட இப்பாடசாலையின் கட்டடங்கள், சேதமடைந்து காணப்படுவதன் காரணமாக இப்புனரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

கிளிநொச்சி மேற்கில் உள்ள 1ஏபி பாடசாலையான இப்பாடசாலையில் 750 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 

மீள்குடியேற்றத்தின் பின்னர் இப்பாடசாலை 1,000 பாடசாலைத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டதன் காரணமாக, இப்பாடசாலையின் ஆரம்பப் பிரிவுக்கென அக்கராயன் ஆரம்பப் பாடசாலையென, தனிப்பாடசாலை 2011 இல் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .