2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அடிப்படை வசதிகளின்றி அவதியுறும் ஐயன்குளம் கிராமம்.

George   / 2016 மே 10 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள மிகவும் பின்தங்கிய பிரதேசமாக கானப்படும் ஐயன்கன்குளம் கிராமத்தின்  அடிப்படைத்தேவைகள் இதுவரை பூர்த்தி செய்யப்படாமையினால் சுமார் 361 குடும்பங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் தினமும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இக்கிராமத்துக்கான பிரதான வீதி முதல் கொண்டு ஏனைய குடியிருப்பு வீதிகள் வரை எந்தவித புனரமைப்புக்களுமின்றி காணப்படுகின்றன.

போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் இக்கிராமத்தில் வாழும் தாங்கள்  தமது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதில்  சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அம்மக்கள் தெரிவித்தனர்.
இதனைவிட மருத்துவ வசதி, மேலதிக கல்வி வசதி என்;பவற்றைப் பெறுவதிலும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதுடன் போக்குவரத்து வசதிகளின்மையால் அதிகூடிய கட்டணங்களில் வாடகைக்கு வாகனங்களை பயன்படுத்தி தமது பயணத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டியுள்ளதாகவும் கிராம மக்கள்  தெரிவித்தனர்.

மீளக்குடியமர்த்தப்பட்டு, கடந்த ஆறு  ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் தமக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்து வந்தபோதும் தமது கோரிக்கைகள் எதற்கும் உரிய அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X