2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

அதிகமாக விதைத்தால் உரிமம் இரத்து

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் குளங்களின் கீழ், சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடுவோர் கூடுதல் விதைப்பில் ஈடுபட்டால் சிறுபோக நெற்செய்கை உரிமம் இரத்துச் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்துக் குளங்களுக்குமான சிறுபோக நெற்செய்கைக் கூட்டங்கள் நிறைவடைந்துள்ளன. குளங்களிலுள்ள நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி சிறுபோகத்தை சிறப்பாக மேற்கொள்வதென கூட்டங்களில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இரணைமடுக்குளம் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று கொண்டிருப்பதன் காரணமாக அந்தக் குளத்தில் கீழ், சிறுபோக நெற்செய்கை இடம்பெறவில்லை. இதனால், காலபோகத்தில் ஏற்படக்கூடிய விதைநெல் தட்டுப்பாட்டை தவிர்க்க ஏனைய குளங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் சிறுபோக நெற்செய்கை முக்கியமானதாகும்.

இந்நிலையில், சிறுபோக நெற்செய்கையில் கூடுதல் விதைப்பில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கையாக சிறுபோக நெற்போக உரிமத்தை இரத்துச் செய்வதென சிறுபோக கூட்டங்களில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X