2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அனுமதியின்றி கடலட்டை பிடித்தவர்களுக்கு அபராதம்

Niroshini   / 2016 மே 13 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

கிளிநொச்சி, பூநகரி கல்முனை கடற்பரப்பில் கடந்த புதன்கிழமை (11) அனுமதியின்றி கடலட்டை பிடித்த 6 மீனவர்களுக்கு தலா 3,000 ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா வெள்ளிக்கிழமை (13) தீர்ப்பளித்தார்.

அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடலட்டைகளை அழிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

குருநகரைச் சேர்ந்த மேற்படி 6 மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்து, கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, குறித்த மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X